search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி வெட்டி கொலை
    X

    விவசாயி வெட்டி கொலை

    • நிலம் சம்பந்தமான பிரச்சினையால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் இவரது சகோதரி மகன் அஜித் (22) என்பவருக்கும் ஏற்கனவே நிலம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக ஜோதி மீது அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஜோதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவரை அஜித் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை வெட்டினார். பின்னர் ஜோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அஜித் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அஜித்தை தேடி வருகின்றனர்.

    சொத்திற்காக மாமா என்று கூட பார்க்காமல் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×