என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
- பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம்
- ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழ கம் (தாட்கோ) சார்பில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் மாணவர்களுக்கு பல் வேறு திறன் அடிப்படையி லான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சி யாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியினை பெற 1 அரசு மற்றும் அரசு உதவிபெ றும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்ப டிப்பில் இறுதியாண்டு படிக் கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கான கால அளவு 3 மாதமா கும். அனைத்து செலவுகளும் தாட்கோவால் வழங்கப் படும்.
தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். தகுதியுள்ள ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதள மான www.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரி வித்துள்ளார்.






