என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி முதியவர் பலி
- ரோட்டை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பகுதி பைபாஸ் ரோட்டில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்த இறந்தவர் யார் என்பது குறித்தும் விபத்துக்கு காரணமான வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






