என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்தார்.
- ேபாலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த காவனூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 59). இவர் வீட்டின் அருகே டிபன் கடை நடத்தி வந்தார்.
இவருக்கு உடல் நலம்பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார் கருணாமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
Next Story






