என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோளிங்கர் சோதனை சாவடிகளில் டி.எஸ்.பி. ஆய்வு
    X

    சோளிங்கர் சோதனை சாவடிகளில் டி.எஸ்.பி. ஆய்வு

    • தடுப்பு கேட் சீரமைக்க உத்தரவு
    • ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய டிஎஸ்பியாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட கிரிஷ் யாதவ் அவர்கள் சோளிங்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பில்லாஞ்சி சோதனை சாவடியை சோதனை சாவடி கட்டிடம், சிசிடிவி கேமரா ஆய்வு செய்தார்.தொடர்ந்து சேதமடைந்ததுள்ள தடுப்பு கேட் சீரமைக்க உத்தரவிட்டார்.

    மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும், நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், தீபாவளி விழா என்பதால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூடும் போது பொதுமக்களின் உடைமைகளை பாதுகாக்க ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.

    அப்போது காவல் ஆய்வாளர் முருகானந்தம் உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    Next Story
    ×