என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலாஜாவில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
- அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
திமுக சார்பில் இளைஞர்களுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார்.
திராவிட மாடல் பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் இளைஞரணி அமைப்பாளரும் ஆற்காடு எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் ஆகியோர் கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்தும், கழக வரலாறு, சாதனைகள் பெருமைகள் மற்றும் மாநில சுயாட்சி குறித்து பேசினார்கள்.
நிகழ்ச்சியில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரை மஸ்தான், குமுதா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முரளி, முகமது அலி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட், நகர செயலாளர் தில்லை, நகரமன்ற தலைவர்கள் ஹரிணி தில்லை, சுஜாதா வினோத், வாலாஜா நகரமன்ற துணைத் தலைவர் கமலராகவன், இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






