search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ராணிப்பேட்டையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

    • பணி நேரத்தை மாற்றியதற்க்கு எதிர்ப்பு
    • 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை வண்டி மேட்டு சாலையிலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களுக்கான பணி நேரம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை முன்னாள் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். அப்போதிலிருந்து இது நடைமுறையில் உள்ளது.

    இந்த நிலையில் தற்போது மேற்கண்ட இந்தப் பணி நேரத்தை மாற்றி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை திரும்ப பெற கோரியும், பழைய நேரத்தை அறிவிக்குமாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க துணைத் தலைவர் மருத்துவர் வேலு ரங்கநாதன், சங்க பொருளாளர் மருத்துவர் வெங்கடேஸ்வரன் உள்பட 40-க்கும் மேற்பட்ட ஆண் பெண் மருத்துவர்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×