search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்காட்டில் விநாயகர் சிலைகள் கரைப்பு
    X

    ஆற்காட்டில் விநாயகர் சிலைகள் கரைப்பு

    • 20 இடங்களில் ‌விநாயகர் சிலைகள் வைத்து பூஜை
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 20 இடங்களில் ‌விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன், மணிகண்டன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு தொழில் அதிபர் ஏவி சாரதி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    உடன் இந்து முன்னணி கோட்டை தலைவர் மகேஷ், முன்னணி கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், ஆகியோர் கொண்டு இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கணபதி நகரில் உள்ள ஏரியில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதனை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    ஆற்காடு கலவை ரோட்டில் உள்ள தாலுகா அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கணபதி நகர் ஏரியில் கரைக்கப்பட்டன.

    இதில் இந்து முன்னணி தொண்டர்கள் ஆன்மீக பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×