search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோளிங்கர் கோவில் உண்டியலில் ரூ.14 லட்சம் வசூல்
    X

    சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியலில் வசூலான காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ.14.20 லட்சம் வசூலானது. 59 கிராம் தங்கம், 93 கிராம் வெள்ளியும் காணிக்கையாக ெசலுத்தப்பட்டிருந்தது.

    சோளிங்கர் கோவில் உண்டியலில் ரூ.14 லட்சம் வசூல்

    • தங்கம் 59 கிராம், வெள்ளி 93 கிராம் இருந்தது
    • 15-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் எண்ணப்பட்டது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலையில் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் , யோக ஆஞ்சநேயர் கோவிலும் நகருக்குள் பக்தோசிப்பெருமாள் கோவிலும் உள்ளது .

    இந்த கோவில்களுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர் .

    இந்த நிலையில் பக்தர்கள் கோவில்களில் வைக்கப்பட் டுள்ள 15 - க்கும் மேற்பட்ட உண்டியல்களில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி பக்தோசித பெருமாள் கோவில் வளாகத்தில் உதவி ஆணையர் ஜெயா தலைமையில் நடைபெற்றது.

    இதில் ரொக்கமாக ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் , தங்கம் 59 கிராம் , வெள்ளி 93 கிராம் இருந்தது இவை திருக்கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேலூர் உதவி ஆணையர் நித்யா , திருக்கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் , ஆய்வர்கள் திலகர், பிரியா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் நரசிங்க ராஜா, பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×