search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்
    X

    அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்

    • இந்தி திணிப்பை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழனி பேட்டை பகுதியில் இந்தி திணிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் திராவிட கட்சியின் மண்டல மாணவர் அணி அமைப்பாளர் அமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் மண்டல தலைவர் பூ எல்லப்பன் மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    என்றும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு வேண்டாம் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரக்கோணம் ஒன்றிய செயலாளர் ச.சி சந்தர், நகர துணைத் செயலாளர் நாகராஜ், திராவிட கட்சியின் மாவட்ட தலைவர் சூ.லோகநாதன், மாவட்ட அமைப்பாளர் ஜீவன் தாஸ், நகரச் செயலாளர் ரமேஷ், மதிமுக மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×