என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 4 தூண்கள் மிகவும் பழுதடைந்துள்ள காட்சி.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தூண்கள் சேதம்
- சரிசெய்ய ெபாதுமக்கள் வலியுறுத்தல்
- 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தொட்டி அமைக்க கோரிக்கை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு காலனி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
இந்த குடும்பங்களுக்கு அப்பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கடந்த 2012 13-ஆம் ஆண்டு பராமரிப்பு செய்யப்பட்டது. கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகி உள்ளதால் இந்த மேல்நிலை தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் நான்கு தூண்களும் சேதமடைந்து சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் சேதம் ஆகி உள்ளதால் எப்போது வேண்டுமானால் விழுந்து விபத்துக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த மேல் நீர் தேக்க தொட்டி அகற்றிவிட்டு கூடுதலாக 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






