என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.
விநாயகர் சதுர்த்தி குறித்து ஆலோசனை கூட்டம்
- பாதுகாப்பு வழங்க ஏற்பாடு
- பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சிலைவைக்க அறிவுறுத்தல்
அரக்கோணம்:
அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் முனி சேகர் (பொறுப்பு ) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் பி.ஜே.பி. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலையை வைப்பது குறித்தும் ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அசம்பாவிதம் எதுவும் நடக்காத வண்ணம் பாதுகாப்புடன் நடத்துவதற்கான பல்வேறு யோசனைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தின் போது உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் உடன் இருந்தார்.
Next Story






