என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.33 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கல்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஊராட்சிக் குழு நிதி யில் இருந்து ரூ.33 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி தலைமை தாங்கினார். சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வகுப்பறை கட்டுமான பணியை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி முருகேசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






