search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் காங்கிரசார் ஆர்பாட்டம்
    X

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் காங்கிரசார் ஆர்பாட்டம்

    • ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர் தலைமை தாங்கி னார்.மாநில பொதுச்செயலாளர் டி.செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் விநாயகமூர்த்தி, மாநில செயலாளர்கள் ஜெயபிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் பிரேமா, கல்பனா இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பஞ்சாட்சரம் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில், நகர தலைவர்கள் உத்த மன் (ராணிப்பேட்டை), பியாரேஜான் (ஆற்காடு), மாவட்ட நிர்வாகி பிஞ்சி மோகன், வாலாஜா ஒன்றிய தலைவர் வி.சி.மோட்டூர் கணேசன் உட்பட காங்கிரஸ் நிரவாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×