என் மலர்
உள்ளூர் செய்திகள்

1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- போலீசார் ரோந்து பணியில் சிக்கியது
- வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று ரேசன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ஆற்காடு மற்றும் விஷாரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப் போது கீழ் விஷாரம் பகுதியைச் சேர்ந்த அகமத் பாஷா (வயது 61) என்பவர் அவரது வீட்டின் அருகில் தலா 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் 1 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதைத்தொ டர்ந்து அகமத் பாஷாவை போலீசார் கைது செய்தனர். அரிசியை பறிமுதல் செய்து வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
Next Story






