என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டையில் தொழில்நெறி விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிப்பு
- ஜூலை மாதம் 2-வது வாரம் அணுசரிப்பு
- 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி
ராணிப்பேட்டை:
தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 2-வது வாரம் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.அதன்படி நேற்று முதல் 15ஆம் தேதி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக பல்வேறு தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்வி போட்டி தேர்வுகள் தனியார் துறை வேலைவாய்ப்பு சுய வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி போன்றவை நடைபெற உள்ளது.
தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த தொழில் முனைவர்களை கொண்டு சுய தொழில் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான வகுப்புகள் வலைதளம் மற்றும் வேலை நாடுநலவர்களுக்காக தற்போது துவங்கப்பட்டுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம் ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திய இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேலை நாடுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மேலும் 15ஆம் தேதி தேசிய திறன் நாளாக அனுசரிக்க அன்றைய தினத்தில் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேற்கண்ட தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வுர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 04172 291400 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சி குறித்த விவரங்களை அறிந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.






