என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாரடைப்பால் இறந்த போலீஸ் ஏட்டு
- பொதுமக்கள் ஏராளமானோர் இறுதி அஞ்சலி
- 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மபாரதி. நெமிலி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து பணிக்கு கிளம்பிய போது அவருக்கு மாரடைப்பு ஏற் பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவரை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 17 - ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து 21 குண்டு முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது . இதில் அரக்கோ ணம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் , காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இறந்த தலைமை காவலர் நரசிம்ம பாரதிக்கு சோனி என்ற மனைவியும், கவிபாரதி, நித்யபாரதி என்ற மகன்களும், திவ்ய பாரதி என்ற மகளும் உள்ளனர்.






