search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரத்தில் கார் மோதி டிரைவர் பலி
    X

    மரத்தில் கார் மோதி டிரைவர் பலி

    • காட்பாடியை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    காட்பாடி அடுத்த தேம்பள்ளி அருகே ஸ்ரீபாதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 35), இவர் அவரது மாமாவிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டை, சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனி தொழிலாளர்களை காரில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளார்.லாலாபேட்டை அருகே பொன்னை சாலை ரெண்டாடி கூட்ரோட்டில் தொழிலாளர்களை இறக்கிவிட்டு விட்டு பிறகு காரில் மேல்பாடி வழியாக ஸ்ரீபாதநல்லூருக்கு பொன்னை சாலையில் சென்றார்.

    குமணந்தாங்கல் அருகே வரும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து அருளின் அண்ணன் ஸ்டான்லி, சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×