search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்புச்சுவர் மீது கார் மோதி மெக்கானிக் பலி
    X

    தடுப்புச்சுவர் மீது கார் மோதி மெக்கானிக் பலி

    • ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் ( வயது 46 ) , கார் மெக்கானிக் . இவர் வேலூரில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு காரில் தனியாக சென்றுள்ளார்.

    பின்னர் இரவு மீண்டும் வேலூர் நோக்கி வந்துள்ளார் . ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு அருகே வந்தபோது, கார் நிலைத்தடுமாறி சிறு பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது . இதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பிரதீப்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரதீப் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×