என் மலர்
உள்ளூர் செய்திகள்

கராத்தே மாஸ்டரை வெட்டிக்கொன்ற அண்ணன் கைது
- இளநீர் பறித்த தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாஸ்கர்(வயது 43). அரக் கோணம் அருகே உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். 'கராத்தே' மாஸ்டராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
கராத்தே மாஸ்டர்
இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் தென்னை மரங்கள் நட்டு வைத்து பராமரித்து வந்தார். மரங்கள் நன்கு வளர்ந்து இளநீர், தேங்காய் போன்றவை மரத்தில் காய்த்து இருந்தது.
இவரது சித்தப்பா மகன் சந்திரன் (45), இவருக்கும் பாஸ்கர் தோட்டத்திற்கு அருகிலேயே விவசாயம் நிலம் உள்ளது. இந்த நிலையில் சந்திரனும் இவரது மனைவி உள்ளிட்டோரும் பாஸ்கர் நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் இருந்து ஓலைகளையும், இளநீரையும் பறித்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த பாஸ்கர், 'என்னுடைய தென்னை மரத்தில் இருந்து ஏன் இளநீரை பறிக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் இருதரப்பி னருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. தகராறை அருகில் இருந்த பாஸ்கரின் மகன் ஆகாஷ் செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், தான் வைத்திருந்த இளநீர் வெட்டும் கத்தியால் பாஸ்கரின் முகம் மற்றும் மார்பில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்தார்.
பாஸ்கரை அங்கிருந்த வர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






