என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலாறு அணைக்கட்டில் இளம்பெண் பிணம் மீட்பு
- கொலையா? போலீசார் விசாரணை
- மாயமானவர்கள் புகார் விவரங்கள் சேகரிப்பு
வாலாஜா:
வாலாஜா அருகே பாலாறு அணைக் கட்டில் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாராவது கொலை செய்து பிணத்தை வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலாஜா அருகே பாலாறு அணக்கட்டு உள் ளது. இங்கிருந்து சாத்தம்பாக்கம் கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை ஒரு இளம்பெண் பிணம் நீரில் உள்ள செடி கொடி களுக்கிடையே மிதப்பதாக அப்பகுதி யிலுள்ள மக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். 20 வயது மதிக்கத்தக்க அந்த இளம்பெண் சுடிதார் அணிந்து இருந்தார். அவர் இறந்து 10 நாட்களுக்கு மேலாகியிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவர் யார்? எந்த ஊர்? மேலும் அவர் கொலை செய்யப்பட்டரா? அல்லது தற்செயலாக நீரில் முழ்கி இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் இளம்பெண்ணின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்டமாக சமீபத்தில் இளம்பெண் மாயமானதாக போலீஸ் நிலையங்களில் வந்த புகார் விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






