என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமங்கள் தோறும் பா.ம.க. கொடி ஏற்ற வேண்டும்
- அமைப்பு செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
காவேரிப்பாக்கம் வன்னிய குல சத்திர மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் மா கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு ஒன்றிய ஊராட்சி கிழக்கழக நிர்வாகிகளுக்கு ஒற்றுமையாக செயல்பட்டு ஒவ்வொரு கிராமம் தோறும் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என கூறினார்.
தமிழ்நாட்டில் தமிழ் மொழி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருவதாகவும் அதனை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள் காவேரிப்பாக்கம் நகர செயலாளர் ராமு, தட்சிணாமூர்த்தி, நெமிலி ஒன்றிய நிர்வாகிகள் திருமால், சண்முகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






