என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்டையில் மூழ்கி பிரியாணி மாஸ்டர் சாவு
- மீன் பிடித்த போது தவறி விழுந்தார்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டை பகு தியை சேர்ந்தவர் ஜமீல் பாஷா (வயது 40). பிரியாணி மாஸ்டர். நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
நேற்று அதிகாலை ஜமீல்பாஷாவை தேடி அவரது மகன் சென்றார். அப்போது குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந் தது.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது ஜமீல்பாஷாவிற்கு நீச்சல் தெரியாததால் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.
Next Story






