search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்
    X

    மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ரவிசந்திரன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பிரசார வாகனத்தை கொடிஅசைத்தார். பின்னர் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

    விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் சந்திரசேகரன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் மற்றும் தனியார் தொழிற்சாலை அலுவலர்கள், ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×