என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்
- ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நெகிழ்ச்சி
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 2003-2005-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறைக் காவலர் சபரி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இவர்கள் தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.
பின்னர் ஆடல் பாடலுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி முடிவில் பிரிந்து செல்ல மனமில்லாமல் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பிரிந்து செல்லும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.
திரும்பிச் சென்ற பின்னர் நிகழ்ச்சி மேடை வெறிச்சோடியாக காணப்பட்டது.
Next Story






