என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. பொது கூட்டம்
- ராணிபேட்டையில் அ.தி.மு.க. 51-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
அதிமுக 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு ராணிப்பேட்டையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணைகொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபால், பொருளாளர் ஷாபூதீன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முனிசாமி, அம்மா பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அ.கோ.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர்கள் டாக்டர் கோ.சமரசம், மணிமேகலை, செங்கை கோவிந்தராஜன், முன்னாள் எம்எல்ஏ சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக வளர்ந்து வந்த பாதை குறித்தும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் செய்த சாதனைகளை விளக்கி பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சீனிவாசன், நகர அவைத் தலைவர் குமரன், நகர செயலாளர்கள் மோகன், இப்ராஹீம் கலிலுல்லா, சோளிங்கர் ராமு, ஒன்றிய செயலாளர்கள் பெல் கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், ஏ.எல்.விஜயன் டி.ராஜா, பேரூர் செயலாளர்கள் அம்மூர் தினகரன், ஆர்.வி.என்.மஞ்சுநாதன், ராணிப்பேட்டை நகர நிர்வாகிகள் பிலிப்ஸ், தியாஜராஜன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர மாவட்ட பிரதிநிதி அஸ்லாம்கான் நன்றி கூறினார்.






