என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் மாணவர்கள் மீது நடவடிக்கை
- சென்னை கோட்ட மேலாளர் தகவல்
- தண்டவாளங்கள் பராமரிப்பு, விபத்து இல்லாமல் தவிர்ப்பது குறித்து விளக்கம்
அரக்கோணம்:
அரக்கோணம் புளியமங்கலம் ரெயில் நிலையம் அருகே ரெயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிமனையில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் தென்னக ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் சிறையில் தண்டவாளங்களை பராமரிப்பது குறித்தும், விபத்து இல்லாமல் தவிர்ப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
வந்தே பாரத் சிறப்பு ரெயில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும் இதன் மூலம் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்தார்.
ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடக்கூடாது எனவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






