search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்ட ரெயில்
    X

    அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்ட ரெயில்

    • பெண்ணுக்கு வாந்தி, மயக்கம்
    • ரெயில் 10 நிமிடம் தாமதமாக சென்றது

    அரக்கோணம்:

    ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவர் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றிருந்தார்.

    திருமணம் முடிந்து ராஜ முந்திரி செல்வதற்காக ஹைட்டா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரெயில் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது இந்திராணிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் டிக்கெட் பரிசோதரிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் அரக்கோணத்திற்கு ரெயில் வந்ததும் உடனடியாக காத்திருந்த மருத்துவர்கள் இந்திராணிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதனால் ரெயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×