என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோந்து செல்லும் போலீசாருக்கு 12 புதிய மோட்டார் சைக்கிள்
    X

    ரோந்து செல்லும் போலீசாருக்கு 12 புதிய மோட்டார் சைக்கிள்

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத் தில் ரோந்து பணியில் ஈடு படும் போலீசாருக்கு மோட் டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடை பெற்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி, ரோந்து பணிக்காக வழங்கப்பட்டுள்ள புதிய 12 மோட்டார் சைக்கிள்களை ரோந்து காவலர்களிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு விசுவேசுவ ரய்யா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    குற்றச் செயல்களை தடுக்க இது உதவியாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×