என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி விபத்து
    X

    ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி விபத்து

    • டிரைவர் மற்றும் உதவியாளர் காயமின்றி தப்பினர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த கொண்டகுப்பம் கிராமத்தில் நோயாளி ஒருவரை ஏற்றி வருவதற்காக, லாலாபேட்டை-பொன்னை சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.

    கொண்டகுப்பம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, ஆம்புலன்ஸ்சின் பக்கவாட்டில் மோதி விபத்து ஏற்பட்டது.இதில் அதிர்ஷ்டவசமாக ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர் காயமின்றி தப்பினர்.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×