என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் உள்பக்கமாக தாழிட்டுக்கொண்ட 1½ வயது குழந்தையால் பரபரப்பு
- எவ்வளவு முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை
- தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகள், 1½ வயதில் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் தாயார் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தை திடீரென வீட்டின் உள்ளே இருந்த பெட்ரூமில் உள் பக்கமாக தாழ்பாள் போட்டுக் கொண்டான். இதனை திறக்க முடியாமல் குழந்தை கதறி அழுதுள்ளான்.
குழந்தையின் தாயார் எவ்வளவு முயற்சி செய்தும் கதவு திறக்க முடிய வில்லை.
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி சிறுவனை மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






