என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெல் ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளை
    X

    பெல் ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளை

    • கதவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (38) பெல் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார்.

    நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார்.பின்னர் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடைப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை உட்பட பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக மகேஸ்வரன் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மகேஸ்வரன் வீட்டில் திருட்டு போன நகை, பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×