search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி வீட்டில் 9 பவுன் நகை, பணம் கொள்ளை
    X

    விவசாயி வீட்டில் 9 பவுன் நகை, பணம் கொள்ளை

    • கதவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அடுத்த சூரை கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 45) விவசாயி. நேற்று காலை உமாபதி, அவரது மனைவி, பிள்ளைகளுடன் வீட்டை பூட் டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றார். மதியம் வீட் டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் நிலத்திற்கு சென்றுள்ளனர்.

    மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உமாபதி வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான சுமார் 9 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பாணாவரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    நகை திருடு போன பீரோ, உடைக்கப்பட்ட கதவில் இருந்த மர்ம கும்பலின் கைரேகை களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். அதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×