என் மலர்
உள்ளூர் செய்திகள்

புயல் மழையால் பாதிக்கப்பட்ட 70 பேர் முகாமில் தங்க வைப்பு
- அமைச்சர் காந்தி நலதிட்ட உதவிகளை வழங்கினார்
- சாலையில் தேங்கிய மழை நீரை அகற்ற உத்தரவு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்தமேலபுலம் கிராமத்தில் சாலையில் மழை நீர் தேங்கியது. மழைநீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழை நீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியது.
அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மேலபுலம் ஏரிக்கரையோரம் புயலால் பாதிக்கப்பட்ட 70 பேைர மீட்டு அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போர்வை மற்றும் நலதிட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
Next Story






