என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6,250 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்
    X

    6,250 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் பகுதியில் அதிகளவு ஹான்ஸ் உள்ளிட்ட போதை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கடையில் போலீசார் சோதனை நடத்தினர். 6, 250 போதைப்பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக அச நெல்லி குப்பத்தைச் சேர்ந்த அருண் (21), குருவராஜபேட்டையைச் சேர்ந்த ரமேஷ் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் எங்கிருந்து போதை பொருட்களை வாங்கி வருகிறார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×