என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோவில் ஏற்றி வந்த 600 மதுபாட்டில்கள் பறிமுதல்
- டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கணியனூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையிலிருந்து ஒரே நபர் அதிகப்படியான மது பாட்டில்கள் வாங்கிச் செல்வதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு தகவல் கிடைத்தது .
அதன் பெயரில் ராணிப்பேட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் திமிரியில் உள்ள கலவை ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் . அப்போது கீழ்ப்பாடி கூட்ரோடு அருகே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அட்டை பெட்டிகளில் 600 மது பாட்டில்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது . மேலும் இந்த மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது . இதனைத் தொடர்ந்து ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் திமிரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமாரை ( வயது 46 ) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .






