search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள்
    X

    கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள்

    • உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்
    • மாவட்ட செயலாளர் அமைச்சர் காந்தி அறிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வருகிற 7ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் முதல் அ மைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு நாள். நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் கொண்ட கொள்கையாலும் சரித்திர சாதனைகளாலும் கலாச்சார நினைவுகளோடும் நம்மோடு வாழ்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் வாழ, தமிழர் வாழ, தமிழ்நாடு வாழ, தமிழ் கலாச்சாரம் வாழ, தலைவர் மு. கருணாநிதியின் நினைவை போற்றி புகழ் பாடுவோம்.

    தமிழின தலைவர் கருணாநிதி உருவ படங்களுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றியம், நகரம், பேரூர், கிராம கிளை கழகங்களில் மற்றும் வட்ட கிளைக் கழகங்கள் சார்பில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவோம்.

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, தொண்டர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் கிளைகள் தோறும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×