என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மதிப்புக்கூட்டு எந்திரங்களை வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு மானியம்
- அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டு எந்திரங்களை வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை தங்கள் பகுதியிலேயே மதிப்புக்கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்பு கூட்டும் எந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூடும் எந்திரங்களான பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தல் நீக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோலுரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் எந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் ஆகிய மதிப்பு கூட்டு எந்திரங்களை வாங்க விரும்பும் தனிநபர் விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியத்தில் எந்திரங்கள் வழங்கப்படுகிறது.
மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார்களை அமைக்கும் திட்டம் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் சூரிய சக்தியால் இயங்கும் மின் மோட்டார்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அமைக்கும் விவசாயிகளுக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 5 எச்.பி., 7.5 எச்.பி. மற்றும் 10 எச்.பி. திறன் உள்ள மோட்டார்கள் விவசாயிகள் தங்களின் கிணறுகளில் கிடைக்கும் நீரின் அளவைப் பொருத்து அமைத்துக் கொள்ளலாம்.
இந்த இரு திட்டங்களிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய குழுக்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.மேலும் விவசாயிகள் அமைக்கும் புதிய ஆழ்துளை கிணறு புதிய மின் மோட்டார் வாங்கி பொருத்த அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
பழைய ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் இல் உள்ள திறன் குறைந்த மின்மோட்டார் மாற்றுத் திறன் மிகுந்த புதிய பம்பு செட்டுகள் அமைக்கும் அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள், சோலார் பம்பு செட்டுகள் மற்றும் மின் மோட்டார் மானியம் பெற அருகில் உள்ள உப கோட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களை mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.






