என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஓச்சேரியில் இருந்து அரக்கோணம் வரை 4 வழிச்சாலை
    X

    கருத்து கேட்பு கூட்டம் நடந்த காட்சி.

    ஓச்சேரியில் இருந்து அரக்கோணம் வரை 4 வழிச்சாலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கருத்து கேட்பு கூட்டம் நடந்தது
    • பொதுமக்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியில் தனியார் திருமண மண்டபத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    கருத்துக்கேட்பு கூட்டம்

    நிகழ்ச்சியில் நெமிலி தாசில்தார் ரவி தலைமை தாங்கினார். ஓச்சேரி-அரக்கோணம் சாலை விரிவாக்கம் புறவழிச்சாலை குறித்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வியாபாரிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புற வழிச் சாலையாக பிரிந்து ஓச்சேரி வழியாக பனப்பாக்கம், நெமிலி சென்று அரக்கோணம் வரை செல்லும் சாலை இருவழி சாலையாக உள்ளது.இதனை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய உள்ளது.

    இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு தாசில்தார் ரவி கேட்டுக்கொண்டார். மேலும் இதில் வியாபாரிகள் சங்க தலைவர் விவசாய சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர் சுபாஷ் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×