search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 கோவில்களில் உண்டியல் உடைத்து திருட்டு
    X

    3 கோவில்களில் உண்டியல் உடைத்து திருட்டு

    • போலீசார் விசாரணை
    • இரவில் ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் உப்பர ந்தாங்கல், ராஜபாளையம் அய்யம்பே ட்டைசேரி உள் ளிட்ட கிராமங்கள் உள்ளன. உப்பரந்தாங்கல் பஸ்நிறுத்தம் அருகே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    அதேபோன்று ராஜ பாளையம் பஸ் நிறுத்தம் அரு கில் கெங்கையம்மன் கோவி லும், அய்யம்பேட்டைசேரி பஸ் நிறுத்தம் அருகில் கன் னிக்கோவிலும் உள்ளன.

    பஸ் நிறுத்தம் அருகில் கோவில்கள் இருப்பதால் வெளியூர் செல்லும் மாண வர்கள், தொழிலாளர்கள், பயணி கள் அனைவரும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு, உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.

    இந்தநிலையில் 3 கோவில்களிலும் மர்ம கும்பல் சம்பவத்தன்று இரவு உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதனை நேற்று காலையில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

    நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கோவில்களின் உண்டியல் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றது அப்பகுதி பொதுமக் கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×