என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புகாரில் 2 வாலிபர்கள் கைது
    X

    பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புகாரில் 2 வாலிபர்கள் கைது

    • பெற்றோர் புகாரின் பேரில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள காவ னூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் என்கிற சக்திவேல் (வயது 24).

    இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் நட்பாக பழகி தவறாக நடந்துள்ளதாகவும், இதனால் மாணவி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

    இதேபோல் அசோக் (20) என்ற வாலிபரும் மாணவியை வெளியில் அழைத்துச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீசில் நிலை யத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.

    இதனை அடுத்து ராணிப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாஸ், அசோக் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×