என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
    X

    பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

    • குடிபோதையில் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வாலாஜா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் குடியிருப்பவர் அன்பரசி (வயது 35), ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரிகிறார். இவர், திமிரியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குமோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது சாலையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட் டிருந்த 2 வாலிபர்களை தட்டிக் கேட்டார்.

    இதனால் அவர்கள், அன்பரசிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகரா றில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பைக்கை கீழே தள்ளி, அன்பரசி கையில் இருந்த செல்போனை பிடுங்கி கீழே வீசியுள்ளனர்.

    பின்னர் அன்பரசி திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட திமிரியை அடுத்த ராம்பாளையம் பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 22) மற்றும் 19 வயதுடைய வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×