என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 12 நாட்கள் ஸ்ரீலஷ்மி குபேரர் யாகம்
- நாளை மாங்கல்ய பூஜை நடைபெறுகிறது
- பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது
வாலாஜா:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஒரு லட்சம் காசுகள் கொண்டு ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு யாகம், பூஜை, அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.
ஜனவரி 7ம் தேதி முதல் வருகிற 18-ம்தேதி முடிய 12 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாகம், 3 வது நாளான நேற்று சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெற்றது.
ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகத்துடன் மன்ய சூக்த பாசுபத ருத்ர ஹோமமும், பூஜையும் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ தன்வந்திரி, மஹா சுதர்சனம், ஸ்ரீ மகாலஷ்மி ஹோமங்களும் நடைபெற்றன.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். பிஜாய் சோங்கர் சாஸ்திரி நேற்று தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்தார்.அவருக்கு தன்வந்திரி பீடம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் அவர் ஸ்ரீ லஷ்மி குபேர யாகத்தில் கலந்து கொண்டு தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்தார். நாளை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாங்கல்ய பூஜை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் பெண்களுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட மாங்கல்ய சரடு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.






