என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு 1008 லட்டு மாலை
- கோவிந்தா என கோஷத்துடன் பக்தர்கள் வணங்கினர்
- சர்வ அலங்காரம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தப்பட்டது
அரக்கோணம்:
அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள பக்தர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் திருப்பதிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு 12-வது ஆண்டாக பாதயாத்திரை செல்கின்றனர்.
முன்னதாக ஸ்ரீதிருப்பதி திருமலை பாதயாத்திரை குழுவினர் சார்பாக ஸ்ரீசீனிவாச பெருமாள் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி 1008 லட்டுகள் கொண்டு உருவாக்கப்பட்ட மாலை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா என கோஷம் எழுப்பி பெருமாளை வணங்கினர். 1008 லட்டுகளால் உருவாக்கப்பட்ட மாலையில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாளை திரளான பக்தர்கள் வியப்புடன் பார்த்து வணங்கி சென்றனர்கள்.
Next Story






