என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சை விஜயராமர் கோவிலில் நாளை ராமநவமி சிறப்பு வழிபாடு
- மாலை சீதாதேவி சமேத விஜயராமர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.
- சிறப்பு திருமஞ்சனமும் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ள விஜய ராமர் கோவில் மற்றும் அய்யன் கடை தெருவில் உள்ள பஜார் ராமசாமி கோவிலில் நாளை ( வியாழக்கிழமை) ராம நவமி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு விஜய ராமர் கோவிலில் நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமமும், 9 மணிக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம், திருமஞ்சனம் நடைபெறும்.
தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு சீதாதேவி சமேதராக ஸ்ரீ விஜயராமர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
இதேபோல் பஜார் ராமசாமி கோவிலில் நாளை காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.