ராமநாதபுரத்தில் பிடிபட்ட அரியவகை ஆந்தைகள் சரணாலய பகுதியில் விடப்பட்டன

ராமநாதபுரத்தில் பிடிபட்ட அரியவகை ஆந்தைகள் சரணாலய பகுதியில் விடப்பட்டனஅரசு போக்குவரத்து பணிமனை பின்பகுதியில் வித்தியாசமான தோற்றத்தில் ஆந்தைகள் இருப்பது தெரியவந்தது.
ராமநாதபுரத்தில் பிடிபட்ட அரியவகை ஆந்தைகள் சரணாலய பகுதியில் விடப்பட்டன
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை பின்பகுதியில் உள்ள பழைய கட்டிட பகுதியில் நேற்று வித்தியாசமான தோற்றத்தில் ஆந்தைகள் இருப்பது தெரியவந்தது.

அதனை கண்ட சமூக ஆர்வலர் பாண்டி முருகன் உள்பட 4 பேர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனவர் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த 5 ஆந்தைகளையும் மீட்டு சென்று வனத்துறை அலுவலகத்தில் வனச்சரகர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார். ராமநாதபுரத்தில் மீட்கப்பட்ட ஆந்தைகள் அரிய வகையை சேர்ந்தவை. அவை ஆப்பிரிக்க பகுதியில் இருந்து வந்துள்ளன. மீட்கப்பட்ட ஆந்தைகள் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் நேற்று முழுவதும் வைத்து பாதுகாக்கப்பட்டது. இரவில் தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலய பகுதியில் அவைகள் பறக்கவிடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com