search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைதூக்கும் கந்துவட்டி கும்பலால் மக்கள் பாதிப்பு
    X

    தலைதூக்கும் கந்துவட்டி கும்பலால் மக்கள் பாதிப்பு

    • தலைதூக்கும் கந்துவட்டி கும்பலால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
    • அடாவடி வட்டி தொழில் செய்யும் கந்துவட்ட கும்பலிடம் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என் றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கிராமங்கள் அதி–கம் நிறைந்த பகுதி என்பதா–லும், விவசாயிகள் அதிக–மாக வாழ்ந்துவருவதாலும் அவர்களின் குடும்ப வறு–மையை பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்கள், தனிநபர்கள் ஏராளமா–னோர் கடன் கொடுத்து வருகிறார்கள்.

    பெண்களிடம் அதிலும் குறிப்பாக கிராமப்புற பெண்களிடம் பணத்தை கொடுத்து அதை தினந்தோ–றும், வாரம்தோறும், மாதந் தோறும் என அடவடியாக வசூல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி விவசாயி–கள், மீனவர்கள், பனை தொழிலாளர்கள் என அவர்களின் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதக–மாக்கிக் கொண்டு ஒரு கும்பல் வசூலில் ஈடுபட்டுள் ளது.

    கடன் கொடுக்கும் போது அரவணைப்பாக பேசும் இந்த கந்துவட்டி கும்பல் காலப்போக்கில் தங்களது மற்றொரு முகத்தை காட்டு–கிறது. தின வட்டி, வார வட்டி, மாத வட்டி என பட்டியலிட்டு பல்வேறு வழிமுறைகளில் ஏழை, எளி–யோரை மேலும் கடனாளி–யாக்கி வீதியில் நிற்க செய்து விடுகிறார்கள்.

    வாங்கிய பணத்தை விட பல மடங்கு திருப்பிச் செலுத்தும் நிலைக்கு தள் ளப்பட்டுள்ள இந்த கிராம–வாசிகள் பலர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் குடும்பம், குழந் தைகள் உள்ளிட்டோ–ரின் நலன் கருதியும், கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு அடிபணிந்தும் யாரும் போலீசில் புகார் அளிப்ப–தில்லை.

    இந்த நிலை தொடராமல் இருக்க கந்துவட்டி கும்பலி–டம் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் மாவட்ட காவல்துறையும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் கந்துவட்டி கும்பலை கண்டறிந்தும், கண்காணித்தும் அவர்களி–டம் உரிய விசாரணை செய்து கடுமையான நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.இதுபற்றி அந்த பகுதி–யைச் சேர்ந்த சமுக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ராமநா–தபுரம் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருப்பதால் மக்களின் வறுமையை பயன் படுத்தி வட்டி தொழில் செய்யும் கும்பல் கிராமப்புற பெண்களை குறி வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கி–றார்கள். அவ்வாறு வாங்கிய பணத்தை கட்ட முடியாத நபர்களின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு கந்து–வட்டி கும்பல் அபகரித்து விடுகிறது. போலீசில் புகார் கொடுக்க முடியாதபடி கந்துவட்டி கும்பலால் மிரட்டப்படுகின்றனர். கந்துவட்டி கும்பலால் நிறைய பொதுமக்கள் பாதிக் கப்படுகின்றனர். இருந்த–போதிலும் போதிய ஆதா–ரங்கள் இல்லததால் நடவ–டிக்கை எடுக்க முடிய–வில்லை என்று கூறுகிறார் கள்.

    பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அடாவடி வட்டி தொழில் செய்யும் கந்துவட்ட கும்பலிடம் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.

    Next Story
    ×