search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
    X

    மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

    ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

    • செய்யது ஹமீதா கலை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜ சேகர் கலந்து கொண்டார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகள் அனைவரும் புத்தாடை அணிந்து வந்து கல்லூரி வளாகத்தில் அத் தப்பூ கோலமிட்டு உற்சாகத்து டன் ஓணம் பண்டிகை கொண்டாடினர். நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் ராஜ சேகர் கலந்து கொண்டு பேசுகையில், ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஓணம் திருவிழா இன்றும் மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவதோடு இந்திய கலாசார நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் மலர், வணிகவியல் துறை தலை வர் யமுனா, அனைத்து மகளிர் பேராசிரியர்களும் மாணவிகளும் செய்திருந்தனர். முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப், நிர்வாக இயக்குநர் ஹாமிது இப்ராகிம், செயலர் ஷர்மிளா, நிர்வாக இயக்குனர் கள் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    Next Story
    ×