என் மலர்
உள்ளூர் செய்திகள்

காமாட்சி அம்மன் கோவில் ஆடி திருவிழா
- காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.
- பெண்கள் கோவில் முன்பாக கூடி அம்மன் புகழ் பாடி கும்மி கொட்டினர்.
தொண்டி
தொண்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபி ஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதே போல் பரிவார தெய்வங்களான விநாயகர் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவ மூர்த்தி வீதி உலா வந்தது. அப்போது ஏராள மான பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வல மாக வந்து அம்மனுக்கு மலர்களால் பூஜை செய்தனர். முன்னதாக ஏராளமான பெண்கள் கோவில் முன்பாக கூடி அம்மன் புகழ் பாடி கும்மி கொட்டினர்.
Next Story






