search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 24-ந்தேதி உள்ளூா் விடுமுறை
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 24-ந்தேதி உள்ளூா் விடுமுறை

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 24-ந்தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
    • அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும்.

    ராமநாதபுரம்,

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள ஏா்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.

    சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில், வருகிற ஜூலை 2-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    எனவே வருகிற 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×